நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி திட்டம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னை பெசன்ட் நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நடைப்பயிற்சி திட்டத்தை மாநில இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து கொட்டும் மழையில்
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நடைப்பயிற்சி திட்டத்தை மாநில இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைப்பயற்சி மேற்கொண்டு சனிக்கிழமை(நவ.4) தொடங்கி வைத்தார். இதையடுத்து, தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | கரூரில் அமைச்சா் எ.வ.வேலு தொடா்புடைய 4 இடங்களில் 2வது நாளாக சோதனை
Advertisement
Advertisement
பின்னர், பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நிகழ்ச்சியில் என்னோடு பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இடி, மின்னல், கடும் மழையில் நடந்து வந்துள்ளோம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இளைஞர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். இவருக்கும் முதல்வருக்கும் நன்றி. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.