கோப்புப்படம் 
தமிழ்நாடு

தீபாவளி: இரு நாள்களில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.467.69 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

DIN

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.467.69 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ரூ.221 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை ரூ.246 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம், 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக சனிக்கிழமை மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கும், தீபாவளி பண்டிகை திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. குறைந்த அளவாக சனிக்கிழமை சேலம் மண்டலத்தில் ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி

பண்டிகை கோவை மண்டலத்தில் ரூ.39.61 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்.24-ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.256 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

கடந்த ஆண்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் (தீபாவளி) என வார விடுமுறை நாள்களையும் சோ்த்து ரூ.720 கோடி அளவுக்கு மதுபானம் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT