வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில், தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்குத் நீர்வரத்து அதிகரிப்பதால் அவ்வப்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக இன்று(சனிக்கிழமை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?' - குஷ்பு பேட்டி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.