FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மகாளய அமாவாசை: மேல்மலையனூருக்கு 380 சிறப்புப் பேருந்துகள்!

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

Updated On : 11 அக்டோபர் 2023, 9:09 pm IST
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம்: மகாளய அமாவாசையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கோட்டத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரட்டாசி மாத அமாவாசையன்று (மகாளய அமாவாசை) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் பல்வேறு நகரங்களிலிருந்து அக்டோபர் 14-ஆம் தேதி 380 சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளது.

Advertisement

Advertisement

சென்னையிலிருந்து 210 பேருந்துகள், தாம்பரத்திலிருந்து 40, காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிலிருந்து 20, திருவண்ணாமலையிலிருந்து 20, திருக்கோவிலூரிலிருந்து 10, கள்ளக்குறிச்சியிலிருந்து 5, ஆரணி/ஆற்காடு/திருப்பத்தூரிலிருந்து 10 என மொத்தமாக 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments