முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மனிதம் மரத்துப் போய்விட்டதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு!

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதம் மரத்துப் போய்விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழ்நாடு

மனிதம் மரத்துப் போய்விட்டதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு!

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதம் மரத்துப் போய்விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதம் மரத்துப் போய்விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

போர் என்பதே கொடூரமானது!

அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காஸாபகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. 

உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும்,  குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன. 

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?

உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. 

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →