முகப்பு
தமிழ்நாடு

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஏற்க மறுப்பு

 பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

 பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான காந்தியவாதி டி.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது ஆகும் எனவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பா் மாதம் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத இந்திய தோ்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்

தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் பரத சக்கரவா்த்தி, லட்சுமி நாராயணன் அமா்வு முன்பு வியாழக்கிழமை முறையிடப்பட்டது. ஆனால், அவசர வழக்காக ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →