தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் தற்போது 5,41,422 வாக்காளர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். 

DIN


நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 422 வாக்காளர்கள் உள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  கீழ்வேளூர்,  நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். 

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,65,472 ஆண் வாக்காளர்களும், 2,75,926 பெண் வாக்காளர்களும், 24, மூன்றாம் பாலினத்தவர் என 5,41,422 வாக்காளர்கள்  உள்ளனர். 

18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளராக சேர்ந்து கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்கம் தொடர்பாக நவம்பர் மாதம் 4 -ஆம் தேதி 5-ஆம் தேதி 18-19 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் அந்தந்த வாக்கு சாவடிக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT