பட்டாசு விற்பனை: தீவுத்திடலில் இன்றுமுதல் தொடக்கம்!
நவம்பர் 15ஆம் தேதி வரை 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்றுமுதல் (அக்.29) பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு, இன்றுமுதல் நவம்பர் 12ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
டெண்டர் முறையில் கடைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பட்டாசுகள் விற்பனை இன்றுமுதல் தொடங்கவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.