FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அவதூறு கருத்து தெரிவித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈ.ஆர். ஈஸ்வரன்

திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

Updated On : 31 அக்டோபர் 2023, 11:54 am IST
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ.
பகிர்:

நாமக்கல்: திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அண்மையில் திருச்செங்கோடு தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவையில் நான் துதிப் பாடுவதாகவும், மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவதில்லை என குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை பதிவேடுகளை எடுத்து பார்த்தால் நான் என்ன பேசி உள்ளேன், எதற்காக பேசி உள்ளேன் என்பது தெரியவரும். 

Advertisement

Advertisement

இது தொடர்பாக என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க அவர் தயாராக உள்ளாரா? அவ்வாறு இல்லையெனில் பொதுக்கூட்டத்தில் பேசியமைக்கு என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments