தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை!

DIN

சென்னை: அதிமுகவை சேர்ந்த தியாகராய நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் புதன்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ. 3.21 கோடியாக இருந்த சத்யாவின் சொத்து மதிப்பு, 2021 பேரவைத் தேர்தலில் போட்டியிடும்போது ரூ. 16.44 கோடியாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக சத்யா மீதும், அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீடு உள்பட 18 இடங்களில் இன்று காலை 6 மணிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT