உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்!
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | காற்றில் கம்பு சுற்றும் பாஜக தலைவர்கள்: உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்தும் மேடையில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் இரு அமைச்சர்களும் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.