முகப்பு
தமிழ்நாடு

திராவிட மாடல் இந்தியாவுக்கானதாக மாறும்: கமல்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

Updated On : 2 ஏப்ரல், 2024 at 1:48 PM
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதனை பொதுமக்கள் செய்துகொண்டே இருந்தால்தான் நாடு நலமுடன் இருக்கும்.

என் தம்பி துரைவைகோவுக்காக வந்துள்ளேன். திராவிட மாடல் நேற்றோ, இன்றோ வந்ததில்லை. திராவிட மாடல் விரைவில் இந்தியாவுக்கான மாடலாக மாறும்.

மதிய உணவுத் திட்டத்தை தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டமாக மாற்றியுள்ளார்.

பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை வணங்கவில்லை என்றால் கூட மறந்துவிடாதீர்கள். திருச்சியில் புதிய பேருந்துநிலையம் கட்டப்பட்டு வருகிறது.

நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையை விட தமிழ்நாட்டிற்கு குறைவு. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அந்தத் தொகையில் செயல்படுத்தப்படுபவைதான் தமிழ்நாட்டின் திட்டங்கள். அவற்றை அதிகரித்துக்கொடுத்தால் இன்னும் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்ய முடியும் என கமல்ஹாசன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.