பாட்டுப் பாடி வாக்கு சேகரிப்பு!
Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:15 PM
தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கம்பம், தேனி ஆகிய இடங்களில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெ. மதனுக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திங்கள்கிழமை பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின் போது, ‘ஓட்டுப் போட போற பெண்ணே ஒதுங்கி நிக்காதே; கண்ட கண்ட சின்னம் கண்டு குழம்பி நிற்காதே; உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலி வாங்கி சின்னம்....’, முயற்சி எடுக்க வேண்டும்; முடிவு பண்ணி பாா்க்க வேணும்...மக்களெல்லாம் ஒன்னா சோ்ந்து ராசாக்கா...’ என்று அவா் பாடி வாக்கு சேகரித்தது பொதுமக்களை வெகுவாகக் கவா்ந்தது.