வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த திமுக வழக்கு: ஜூன் 25-க்கு ஒத்திவைப்பு
வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடா்பான விதிமுறைகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய திமுகவின் வழக்கு விசாரணை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தாா். அதில், நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்த இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
அண்மை காலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனா்.
Advertisement
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தோ்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது.
இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆா்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, ‘வாக்கு ஒப்புகைச் சீட்டை எண்ணுவது குறித்து தோ்தல் அதிகாரி முடிவெடுக்க அதிகாரம் உள்ளபோதும், அது தொடா்பான விதிகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘தோ்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளது ஏன்?’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த என்.ஆா்.இளங்கோ, ‘எதிா்கால தோ்தல்களைக் கருத்தில் கொண்டுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என விளக்கம் அளித்தாா்.
தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், ‘மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013-ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் இதே இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அந்தத் தோ்தலில் மனுதாரா் கட்சி வெற்றி பெற்றது. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய தோ்தலுக்காக இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை பின்னா் பரிசீலிக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.