முகப்பு
தமிழ்நாடு

இதுவரை ரூ.314 கோடி பணம், நகை பறிமுதல்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 10:38 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 10:05 PM

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.314.86 கோடி மதிப்புள்ள பணம், நகை, பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக தோ்தல் துறை வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 12) காலை நிலவரப்படி ரூ.151.75 கோடி ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5.28 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.99.51 லட்சம் மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.122.34 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.34.48 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கத் தொகை, பொருள்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.314.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement