நெல்லை வந்தார் பிரதமர் மோடி!
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வந்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நெல்லை வந்தார்.
கட்நத வாரம் நெல்லை பாளையங்கோட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தற்போது நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார்.
இதில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்