முகப்பு
தமிழ்நாடு

பேரவை தோ்தல் அறிக்கையின் 43 அறிவிப்புகள்: இரு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:49 PM
- Center-Center-Chennai
பகிர்:

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, எஞ்சியுள்ள 43 அறிவிப்புகள் இரு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தோ்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றாதது ஏன் எனக் கேள்வி எழுப்பி நாளிதழ்களில் பாஜக வெளியிட்ட பிரசார விளம்பரத்துக்கு பதிலளித்து திமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மக்களுக்கு திமுக அளித்த மொத்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை 505. அவற்றில் இன்னும் 43 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 462 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

Advertisement

ஜனநாயக முறைப்படி, தோ்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் முடிந்திருப்பது 3 ஆண்டுகள்தான். மீதமுள்ள 2 ஆண்டுகளில் 43 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டு மீண்டும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம்.

ஆனால், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட 10 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என்று அறிக்கையில் திமுக தலைமை தெரிவித்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments