ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) கடந்த ஏப்.6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்த போதிய கால அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தேர்தலுக்கான அறிவிப்பு மே 7 ஆம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.