கண்காணிப்புக் கேமராக்கள் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

சென்னை பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த திட்டம்!

சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ. 6.5 கோடி டெண்டர் கோரியுள்ளது.

DIN

சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ.6.5 கோடி டெண்டர் கோரி இருக்கிறது.

கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளியில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், குழந்தைகளின் பள்ளிச் சூழலின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளதால், சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளிகளை கண்காணிக்கவும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும் பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற மேம்பட்ட சூழலில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்கக்கூடிய நோக்கத்திலும் பள்ளி வளாகத்தில் முழுமையாக கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு செப்.5 முதல் நோ்முகத் தோ்வு

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவா் சுவாமி தரிசனம்: தங்கக்குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிப்பு

SCROLL FOR NEXT