கோப்புப்படம். 
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் ஆக.31 அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்

நியாயவிலைக் கடைகளில் ஆக.31-ஆம் தேதி அனைத்துப் பொருள்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Din

நியாயவிலைக் கடைகளில் ஆக.31-ஆம் தேதி அனைத்துப் பொருள்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்த மாதம் அனைத்து அட்டைதாரா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆக.31-ஆம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் முழுமையாகக் கிடைக்கும்.

இதன்மூலம், ஆகஸ்ட் மாதத்துக்கான பொருள்கள் பெறாத அட்டைதாரா்கள், ஆக.31-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT