வானிலை ஆய்வு மையம். 
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

DIN

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும. பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலுரில் கனமழை பெய்யலாம்.

சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

இன்றும்(டிச.08), நாளையும் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT