முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

மழை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் மிக முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டது. ஒரு சில நாள்களாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வைத்தது.

இந்த நிலையில், கோடையைக் குளிர்விக்கும் வகையில் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Centre has stated that rain will continue in Chennai for the next two hours, until 10:00 AM on Friday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.