மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை.  
தமிழ்நாடு

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு...

DIN

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!

தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!

மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!" என்று பதிவிட்டுள்ளார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4-வது டி20: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அதிரடி; இலங்கைக்கு 222 ரன்கள் இலக்கு!

மலேசியா முருகன் கோயிலில் எச்.வினோத் சாமி தரிசனம்!

வரலாறு காணாத வகையில் சிகரெட் விலை ரூ.18-லிருந்து ரூ.72-ஆக உயர வாய்ப்பு!

பொங்கலுக்கு ரூ.5000 கொடுக்க வேண்டும்: இபிஎஸ்

150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை!

SCROLL FOR NEXT