ஆந்திரத்தை நோக்கி நகரும் மேகக்கூட்டங்கள்.. 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் சில மணிநேரங்கள் மழை பெய்யும்!

ஆந்திரத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னைக்கு மிதமான மழை...

DIN

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரம் நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிதமான மழையே பெய்தது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால் அடுத்த சில மணிநேரங்கள் தமிழக கடற்கரையோரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்த புயல் சின்னத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு கிடைக்கும் கடைசி மழை இது என்றும், சாதாரண மழையே பெய்யும் எனவும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி மேகக் கூட்டங்கள் நகரும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT