கோப்புப் படம் 
தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி இன்ஸ்டா நண்பர்கள் பலி; விசாரணையில் வெளியான தகவல்!

நண்பரைக் காண திருப்பூர் சென்ற சென்னையைச் சேர்ந்தவர் உள்பட மூவர் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

DIN

நண்பரைக் காண திருப்பூர் சென்ற சென்னையைச் சேர்ந்தவர் உள்பட மூவர் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் 3 பேரின் சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினர் சனிக்கிழமையில் (டிச. 21) தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஒரு பள்ளி மாணவி, இரு இளைஞர்கள் என 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணையும் நடத்தினர்.

விசாரணையில், உயிரிழந்தவர்களில் பள்ளி மாணவியும், அவரது நண்பரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பதும் தெரிய வந்தது. மேலும், ஆகாஷும் பள்ளி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில், சிறுமியைக் காண உடுமலைப்பேட்டைக்கு ஆகாஷ் வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆகாஷ், சிறுமி, அவரது நண்பர் ஆகிய மூவரும் பைக்கில் ஒன்றாகச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தின் அருகே பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி, குளத்தினுள் மூழ்கி, உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்எஸ்சி தோ்வா்கள் மீது பலப் பிரயோகம்: போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

SCROLL FOR NEXT