அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) Din
தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் ரவி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது பற்றி..

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பல்கலை. பதிவாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உள் விசாரணைக் குழுவிடமும் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT