வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
தைப்பூசத்தை முன்னிட்டு, வைகை விரைவு ரயில் பிப்.11 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு இருமுடி கட்டி செல்லும் பக்தா்களின் வசதிக்காக மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில் டிச.28 முதல் பிப்.11 வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.08 மணிக்கு வரும் ரயில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.