முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:58 PM
வைரக் கற்கள்
பகிர்:



சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சூட்கேசில் வைரக் கற்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக அந்த வாலிபரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வைரக் கற்களின் மதிப்பு ரூ.2.33 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →