கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்: திருமாவளவன்

DIN

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைப் பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தனித்தொகுதி 3, பொதுத் தொகுதி 1 என 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக குழுவினரிடம் வழங்கினோம்.

அதிமுக, பாஜக கூட்டணி சிதறிக் கிடக்கிறது. பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி இயங்குகிறது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT