புல்லூா் தடுப்பணை (கோப்புப் படம்). 
தமிழ்நாடு

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: நாளை அடிக்கல் நாட்டுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

DIN

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் கனிம வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாலாறு அணை தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிரச்னை தீர்ந்தது.

நாளை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

தேர்தலுக்குப் பின் பாலாற்றில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்காக ஆந்திர அரசு நாளை அடிக்கல் நாட்டுவது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT