தமிழ்நாடு

கிண்டி - பரங்கிமலை ரயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரயில்கள் நிறுத்திவைப்பு!

பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பாதையில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன

ரயில்வே பாதையின் பக்கத்தில் 5 அடி உயரத்தில் புல் வளர்ந்து வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது

உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்த நிலையில், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இருந்து பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பொதுமக்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ரயில் கடந்து செல்லும் பொழுது, காற்றின் வேகத்தால் தீ பரவக்கூடும் என்பதால் 20 நிமிடங்களுக்கு மேலாக மின்சார ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT