தமிழ்நாடு

ஐஐடி-சென்னையில் 720 ஆன்லைன் படிப்புகள்

DIN

சென்னை: ஐஐடி-சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. இங்கு வழங்கப்படும் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2024ஆம் ஆண்டு ஜனவரி - ஏப்ரல் கல்விப் பருவங்களுக்கான சேர்க்கை தொடங்கியிருக்கிறது.

கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட கற்றலுக்கான தேசிய திட்டத்தின்  (என்.பி.டி.இ.எல்.) கீழ் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.

பொறியியல், அறிவியல், மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் 720க்கும் மேற்பட்ட படிப்புகளுடன், இந்த செமஸ்டரில் 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் வாய்ப்புகள் வழங்குவதை என்பிடிஇஎல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் http://nptel.ac.in/ அல்லது சுவயம் http://swayam.gov.in/ என்று அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 19 ஆகும்.

முன்பதிவு இலவசம் என்றாலும், படிப்பை மேற்கொள்பவர்கள் ரூ.1,000 செலுத்தி விரும்பும் சான்றிதழ் படிப்புகளில் பங்கேற்கலாம். இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் என்பிடிஇஎல் படிப்புகளில் படித்து பயனடைந்துள்ளனர்.

இந்த செமஸ்டரில் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி முறை, கணக்கீட்டு மரபியல், கட்டமைப்பு அதிர்வுநிலை, பயன்பாட்டு புள்ளியியல் வெப்ப இயக்கவியல், விளையாட்டுகள் மற்றும் தகவல் மற்றும் பரிசோதனை ரோபாட்டிக்ஸ் போன்றவை புதிய பாடத்திட்டங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT