சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, சுடா் ஓட்டத்தை அமைச்சரும், கட்சியின் இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மாநாட்டு வளாகத்திலிருந்து சிறப்புப் புகைப்படங்கள்: