தமிழ்நாடு

திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!

DIN


திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 8 அடிய உயர முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. 

இந்த சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய உதயநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை கண்டாலே சிலருக்கு இப்போதெல்லாம் வயிறு எரிகிறது. 

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வேண்டும் என்ற உறுதி மொழியை கருணாநிதி சிலை முன்பு உறுதியேற்போம் என உதயிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT