தமிழ்நாடு

திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

DIN


திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 8 அடிய உயர முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. 

இந்த சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய உதயநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை கண்டாலே சிலருக்கு இப்போதெல்லாம் வயிறு எரிகிறது. 

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வேண்டும் என்ற உறுதி மொழியை கருணாநிதி சிலை முன்பு உறுதியேற்போம் என உதயிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT