தமிழ்நாடு

நெல்லை குடியரசு தின விழா: தேசியக் கொடியில் சிக்கிய பலூன்!

DIN

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் 22 பேருக்கு ரூ.6.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

காவல்துறையைச் சேர்ந்த 38 பேருக்கு முதல்வர் பதக்கங்களையும், 57 பேருக்கு மாவட்ட காவல்துறை பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 510 பேருக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இந்த விழாவில் மூவர்ண பலூனை பறக்க விட்டபோது  தேசியக் கொடியில் பலூன் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பிரத்யேக ஏணி மூலம் பலூன்களை பிரித்து எடுத்து பறக்க விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரைக்கதிர்

நடன இயக்குநர் ராதிகா இயக்கும் கதை

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

SCROLL FOR NEXT