முகப்பு
தமிழ்நாடு

நெல்லை குடியரசு தின விழா: தேசியக் கொடியில் சிக்கிய பலூன்!

திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் 22 பேருக்கு ரூ.6.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

காவல்துறையைச் சேர்ந்த 38 பேருக்கு முதல்வர் பதக்கங்களையும், 57 பேருக்கு மாவட்ட காவல்துறை பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 510 பேருக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

Advertisement

இந்த விழாவில் மூவர்ண பலூனை பறக்க விட்டபோது  தேசியக் கொடியில் பலூன் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பிரத்யேக ஏணி மூலம் பலூன்களை பிரித்து எடுத்து பறக்க விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments