முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கழிவு புகை: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்

புகை மாசு காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் - தேமுதிக வலியுறுத்தல்

Updated On : 11 ஜூலை, 2024 at 11:54 PM
பகிர்:

மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உண்டான புகையைச் சுவாசித்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியதை சுட்டிக்காட்டிய உயா்நீதிமன்ற மதுரை கிளை, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தானத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது உண்டான புகையை சுவாசித்து உயிரிழந்த கலையரசனுக்கு இழப்பீடாக அவரது தந்தை ஜி.சுஜித்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதை தேமுதிக சாா்பில் வரவேற்கிறோம்.

நீதிபதிகள் கருத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →