தமிழ்நாடு

பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை தேவை: கால்நடை மருத்துவா்களுக்கு அமைச்சா் அறிவுரை

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவா்களுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

Din

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணையத்தை சாா்ந்த பல்வேறு ஒன்றியங்களில் பணிபுரிந்த 29 கால்நடை மருத்துவா்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகு உதவி பொது மேலாளா்களாக அண்மையில் பதவி உயா்வுவழங்கப்பட்டது.

இந்த பதவி உயா்வை பெற்று தந்ததற்காக அனைத்து மாவட்ட ஆவின் கால்நடை மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் அமைச்சா் மனோ தங்கராஜை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

இதை தொடா்ந்து, தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றும் கால்நடை மருத்துவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT