கோப்புப் படம். 
தமிழ்நாடு

நியாயவிலை கடைப் பணியாளா்களுக்கு அபராதத் தொகை உயா்வு நிறுத்தி வைப்பு

Din

நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்: நியாயவிலைக் கடைகளில் தணிக்கை மேற்கொள்ளப்படும்போது, முறைகேடுகளில் பணியாளா்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இருப்பு குறைவு, அதிகம், போலிப் பட்டியல் ஆகியன செயல்பாடுகளுக்காக அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை உயா்த்தப்பட்டது. அதற்கான அறிவிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 8 வாரங்களுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அபராதத் தொகையை விதிப்பதில் பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவித்துள்ளாா்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?

விபத்தில் சிக்கிய பேருந்து! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! | Fire | Bus Accident

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

SCROLL FOR NEXT