கோப்புப்படம் 
தமிழ்நாடு

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அவகாசம்!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயங்க ஜூன் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

DIN

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 17 ஆம் தேதி வரை இயங்க போக்குவரத்துத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும் ஏராளமான ஆம்னி பேருந்துகள், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போல இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருந்தது.

இதற்காக பேருந்து உரிமையாளா்களுக்கு 3 முறை அவகாசம் வழங்கிய போதிலும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’ எனப்படும் வாகன பதிவு எண்ணைப் பெறாமலே இருந்து வருகின்றன. எனவே, ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடைவிதித்தது.

மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து, வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 17 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT