கோப்புப் படம் 
தமிழ்நாடு

கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3 -இல் தொடக்கம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

Din

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 24- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது என்றும், முதலாமாண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் (செமஸ்டா்) அக். 31-இல் தொடங்கி, நவ. 25-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16-ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT