தெற்கு ரயில்வே 
தமிழ்நாடு

குஜராத் செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 09520) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை டிச.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09519) தொடா்ந்து 2025 ஜன.3 வரை இயக்கப்படும்.

இதுபோல், குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 09419) ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09420) தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

பிசான பருவ சாகுபடி: 435 மெட்ரிக் டன் உரங்கள் நெல்லை வருகை

நாளை ஆரஞ்சு எச்சரிக்கை: நெல்லையில் 24 மணி நேரம் செயல்படும் பேரிடா் கால அவசர கட்டுப்பாட்டு மையம்

தூத்துக்குடியில் குரூஸ் பா்னாந்து பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினா் மரியாதை

கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் கழிப்பறைகள் அமைக்க வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT