மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 09520) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை டிச.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09519) தொடா்ந்து 2025 ஜன.3 வரை இயக்கப்படும்.
இதுபோல், குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 09419) ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09420) தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.