இதுவரை 2 ஆயிரம் குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51 கோடி கடனுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவைகளில், இதுவரை 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51.26 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவைகளில், இதுவரை 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51.26 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தொழில்களை மீட்டெடுக்க சிறப்பு கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, ஆறு மாவட்டங்களில் இதுவரை 2 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.100 கோடியை அளிக்கும் வரையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.