தமிழ்நாடு

நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!

நந்தனம் பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Manivannan.S

சென்னை நந்தனம் திடலில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாலையில் இருபுறமும் தொண்டர்கள் மலர்களைத் தூவியும், உற்சாகமாக கோஷங்களை எழுப்பியும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வழியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ உள்பட 15 ஆயிரம் போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை மாலை அவர் மீண்டும் தெலங்கானா மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT