தமிழ்நாடு

நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Manivannan.S

சென்னை நந்தனம் திடலில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாலையில் இருபுறமும் தொண்டர்கள் மலர்களைத் தூவியும், உற்சாகமாக கோஷங்களை எழுப்பியும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வழியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ உள்பட 15 ஆயிரம் போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை மாலை அவர் மீண்டும் தெலங்கானா மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT