மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 6 மக்களவைத் தொகுதிகளிலும், கேரளத்தில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தென்மாநில விசிக செயற்குழு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்களவைத் தேர்தல் குறித்து விரிவான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திரத்தில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து நாடாளுமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். இதற்காக ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவிடமிருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.
மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வலியுறுத்தி தென்மாவட்டங்களில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.