துரை வைகோ கோப்புப் படம்
தமிழ்நாடு

பாஜகவை எதிர்ப்பதை அதிமுக உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ

அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

DIN

வரும் மக்களவைத் தேர்தல், மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுக சார்பில் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, மத்தியில் யாரை ஆட்சியில் விடக்கூடாது என்பதற்கானத் தேர்தல் இது. மக்களவைத் தேர்தலில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட உயர்மட்ட ஆட்சிக் குழுவினர் ஒப்புதல் அளித்தனர். மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜகவை எதிர்ப்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT