தமிழ்நாடு

டி.ஆர்.பாலு, ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

துரை வைகோ, கதிர் ஆனந்த், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்திலும் போட்டியிட இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதேபோல், திருச்சியில் மதிமுக துரை வைகோ, வேலூரில் திமுக கதிர் ஆனந்த், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT