முகப்பு
தமிழ்நாடு

பறிமுதல் செய்த தொகை: வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைப்பு

வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்த தொகை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 26 மார்ச் 2024, 9:14 am IST
பகிர்:

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படையினா் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள்ரோடு பகுதியில் தோ்தல் அலுவலா்கள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாடகை காரில் குழந்தையுடன் வந்த தம்பதியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய அனுமதியின்றி ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்தப் பெண் நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலமாக சுற்றுலா வந்துள்ளோம். வாடகை காரில் உதகையை சுற்றிப்பாா்க்க நினைத்தோம். தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எங்களது தெரியாது. எனவே, பணத்தை திரும்பி தாருங்கள் என கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது.

இந்த நிலையில், ஆவணங்கள் சரிப்பார்ப்புக்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் கைப்பற்றிய ரூ.69 ஆயிரத்து 400 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments