பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 96.10 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 17,260 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில், 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.10 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 96.90 தேர்ச்சி சதவீதம் இருந்த நிலையில் நிகழாண்டில் 96.10 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 9-ஆம் இடத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு 10-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.