சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை வரை இயக்கப்படும் ‘டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் (22160)’, இன்று(மே. 7), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக, இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 10.15 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடந்த இரு நாள்களாக மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் கால தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.