முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 மே, 2024 at 8:42 AM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிக்கையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நாளையும் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி,மதுரை, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →